ஷாக்… புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் வெடித்தது: தந்தை- மகள் பலி

Vellore Father and Daughter died due to electric scooter explodes: வேலூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை வர்மா. இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் மோகன பிரீத்தி 8ஆம் வகுப்பு படித்துவருகிறார். துரைவர்மா சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியிருக்கின்றனர். எலெக்ட்ரிக் பைக்கின் சார்ஜ் அதிகமாகி வயரில் தீப்பிடித்ததால் நள்ளிரவில் பைக் வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீப்பற்றி எரிந்தது.

இதையும் படியுங்கள்: விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியவரை காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஐ.ஏ-க்கு 2 நாட்கள் அனுமதி

இதனை வீட்டிற்குள்ளிருந்து பார்த்த தந்தையும் மகளும் புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லவேண்டாம் என நினைத்து கழிவறையில் பதுங்கியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறையிலும் புகைமூட்டம் சூழ்ந்திருக்கிறது. இதனால் மூச்சுத்திணறி கழிவறையிலேயே தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர்.

துரைவர்மா வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. கழிவறையில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.