#IPL2022 || இரண்டு விக்கெட்., சென்னை அணியில் இன்று களமிறங்கிய முக்கிய வீரர்கள்.! ஆட்டத்தின் நிலவரம்,!

ஐபிஎல் தொடரில் இன்று முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – சென்னை அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கி பேட்டின்ட் செய்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி தொடங்கியுள்ளது. 

மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றது. 

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவிச்சைத் தேர்வு  செய்யவே, பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள சென்னை அணி தற்போதுவரை 5 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு, 29 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சென்னை அணியில் டிவோன் கான்வே, ஷிவம் டூபே, ஆடம் மில்னே, துஹார் தேஷ்பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.