அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா| Dinamalar

கிறிஸ்ட்சர்ச்: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
நியூசிலாந்தில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. இதுவரை 6 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்றுள்ள இந்தியா, இன்று வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, வெர்மா 53, ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின், வோல்வர்ட் 79, குட்வில் 69 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து அரையிறுதியில் வாய்ப்பை இழந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.