இரவு நேர துப்புரவு பணி துவக்கம்| Dinamalar

வானுார், : திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் சாலையில் மணல் குவியல்களை அகற்ற இரவு நேர துப்புரவு பணி துவங்கியது.திருச்சிற்றம்பலம் மெயின் ரோட்டில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதால், சாலைகளில் மண் குவியல்கள் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது.

இந்த சாலையை சீரமைக்கும் வகையில், திருச்சிற்றம்பலம் ஊராட்சி சார்பில், இரவு நேர துப்புரவு பணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்பணியை திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். ஊராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பெண் துப்புரவு பணியாளர்கள், இரவு முழுவதும், சாலைகளில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்றி வரும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.