ஏப்ரல் 19 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு?

கொரோனா பரவல் காரணமாக, அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

தீவு நாடான சமோவாவில், அண்மையில், பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று இல்லாத நாடாக இருந்த சமோவாவில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்டமாக, மூன்று நாட்களுக்கு
முழு ஊரடங்கு
உத்தரவை பிறப்பித்து அந்நாட்டின் பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா உத்தரவிட்டார்.

சமோவாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று ராஜினாமா செய்கிறார் பிரதமர்? – அதிர்ச்சியில் அமைச்சர்கள்!

இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து, பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சமோவாவில் நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்ச் 25 ஆம் தேதி 93 ஆக இருந்த தினசரி பாதிப்பு, 26 ஆம் தேதி 216 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து, பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா, அதிகாரிகளுடன், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில்
முழு ஊரடங்கு
நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அடுத்த செய்திபனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தை: மருத்துவ உலகின் அதிசயம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.