குழந்தை பாப்பா பிறந்த பிறகும் அந்த சீரியலுக்கு வரமாட்டேன்… ஆல்யா மானசா கொடுத்த ஷாக்!

Raja Rani 2 Serial Alya Manasa Update ; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சீரியல்கள் ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு முக்கிய இடம் உண்டு. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவதால் பல சீரியல்கள் சீசன் 2 என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடம்பெற்றள்ள சீரியல் ராஜா ராணி 2.

ஆல்யா மானசா சித்து ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஆல்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது ராஜா ராணி சீசன் 2-ல் நடித்து வந்த அவர், 2-வது முறையாக கர்ப்பமானார். ஆனாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவர், பிரசவ நாள் நெருங்கி வருவதால் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரியா சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் தற்காலிகமாகத்தான் இந்த கேரக்டரில் நடித்து வருகிறார். ஆல்யா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது.

இதனால் ரசிகர்கள் ஆல்யா மீண்டும் ராஜா ராணி 2 சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தான் இனிமேல் ராஜா ராணி சீரியலுக்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் உரையாடிய ஆல்யாவிடம் சந்தியாவாக நடிக்க வருவது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர், இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரமாட்டேன். தற்போது நடித்து வரும் நடிகை ரியாவே சந்தியாவாக தொடர்ந்து நடிப்பார் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.