கூடுதல் பஸ்கள் இயக்க எம்.எல்.ஏ., கோரிக்கை| Dinamalar

திண்டிவனம் : திண்டிவனத்தில் மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிச் செல்வதால், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.திண்டிவனத்தில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கலைக்கல்லுாரி உள்ளது.

இங்க, சுற்றுப்புறப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இவர்கள், பயணம் செய்வதற்கான பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன், திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் நாராயணமூர்த்தியை சந்தித்தார். அப்போது, பள்ளி மற்றும் கல்லுாரி நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கிளை மேலாளரும், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.