கோவிட் இல்லா மாநிலம் அருணாச்சலுக்கு பெருமை| Dinamalar

இடாநகர்-அருணாச்சல பிரதேசத்தில் ஒருவரிடமும் புதிய தொற்று பதிவாகவில்லை என்பதால், கொரோனா பாதிப்பில்லா மாநிலமாக மாறி உள்ளது.

வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.நேற்றைய நிலவரப்படி கொரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சல் மாறி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தில் நேற்று முன்தினம் 111 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒருவரிடமும் பாதிப்பு பதிவாகவில்லை.

latest tamil news

சிகிச்சையில் இருக்கும் ஒருவரும் விரைவாக குணமடைந்து வருகிறார்.இதனால், கொரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சல பிரதேசம் மாறிஉள்ளது.ஒட்டுமொத்தமாக இதுவரை 12.68 லட்சம் பரிசோதனைகள் வாயிலாக 64 ஆயிரத்து 484 பேரிடம் பாதிப்பு உறுதியானது. இதில், 64 ஆயிரத்து 188 பேர் குணம்அடைந்தனர்; 296 பேர் பலியாகினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.