தனது 134வது மாரத்தானை பாட்னாவில் நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாட்னா:
னது 134வது மாரத்தானை பாட்னாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிறைவு செய்துள்ளார்.

பாட்னாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், 21.1 கி.மீ. தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடந்து அசத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் மாரத்தானில் ஓடுகிறேன்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் லண்டன் மெய்நிகர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவுசெய்து பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.