தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மூளையே இல்ல: இந்தி நடிகர்

எஸ்.எஸ்.
ராஜமவுலி
இயக்கத்தில்
ராம் சரண்
, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

படம் பார்க்கும் அனைவரும் ராஜமவுலி இஸ் பேக் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று கூறும் நடிகர் கே.ஆர்.கே. போட்ட ட்வீட் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர். படம் பற்றி கே.ஆர்.கே. ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ராம் சரணை ஜூனியர் என்.டி.ஆர். தன் தோள்களில் அமர வைக்கிறார். அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய 1000 பேரை இருவரும் எதிர்கொள்கிறார்கள். என்ன இது ராஜமவுலிஜி? இது போன்ற முட்டாள்தனமான காட்சிகளை எல்லாம் மூளையில்லாத தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கே.ஆர்.கே.வின் ட்வீட்டை பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் கோபம் அடைந்து விளாசியுள்ளனர். கே.ஆர்.கே. பட காட்சியை வெளியிட்டு இது என்னவாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே சமயம் சிலரோ, கே.ஆர்.கே.வுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

மூப்பில்லா தமிழே தாயேவை பாராட்டிய பிரபலம்: அவரை எல்லோருக்குமே பிடிக்குமே

அடுத்த செய்திVijay:விஜய்யின் மாஸ் போட்டோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்: பீஸ்டே தான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.