#நாமக்கல் || பள்ளி மாணவிக்கு காதல் கடிதம்., கண்டித்த ஆசிரியை., தற்கொலை செய்த மாணவன்.!

பள்ளி வகுப்பறையில் சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை கண்டித்ததால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பள்ளி ஆசிரியைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரித்து என்பவர், தனது வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் அளித்த புகார் காரணமாக, மாணவனை மன்னிப்பு கடிதம் எழுதி வருமாறு ஆசிரியை தெரிவித்துள்ளார். மேலும் மாணவனை கண்டித்துள்ளார்.

இதனால், அங்கிருந்து வெளியேறிய மாணவனை அவமானம் தாங்காமல் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஆசிரியை தெய்வாம்பிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாணவனின் சாதியை சேர்ந்த அமைப்பினரும், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அதே சமயத்தில்ஆசிரியை தெய்வாம்பிகை  மீது எந்த தவறும் இல்லை, அவர் தனது கடமையை சரியாக செய்துள்ளார். மாணவன்தான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார் என்று, ஆசிரியை தெய்வாம்பிகைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர்.

ஆசிரியைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், ஆசிரியைக்கு எதிராக ஒரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால், அரசு அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.