நோணாங்குப்பத்தில் கரை ஒதுங்கிய ஆமை| Dinamalar

அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் படகு குழாம் அருகே 4 அடி நீளமுள்ள ராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சுண்ணாம்பாற்று கரையோர பகுதியில் நேற்று மாலை 4 அடி நீளமுள்ள ராட்சத ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது.

இந்த ஆமை பாரடைஸ் கடற்கரையில் இருந்து இறந்த நிலையில் சுண்ணாம்பாற்று கரையோர பகுதியில் வந்தாகவும், ஆமை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை என, படகு ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.ஆற்றின் கரையோரம் இறந்து கிடந்த ஆமையை நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மொபைல் மற்றும் கேமரா மூலம் போட்டோ எடுத்து சென்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.