பாலியல் வன்கொடுமை புகார் அளித்த மாணவி தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!

பாலியல் புகார் அளித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், டொம்புச்சேரி பகுதியில் 9ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தனது பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்த கொடுமைய கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.