பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி ரவுடி கொலை.. கொலை செய்துவிட்டு, சடலத்திற்கு மாலை போட்டுவிட்டு தப்பிய கும்பல்

திருச்சியில் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்திற்கு மாலை போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கௌரி சங்கரை செல்போனில் தொடர்பு கொண்ட கார்த்திக் என்பவன், தனது பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்க வருவதாக கூறியிருக்கிறான்.

பின்னர், நேற்று கௌரி சங்கர் வேலை செய்து வரும் தேங்காய் நார் உரிக்கும் கம்பெனிக்கு தனது கூட்டாளிகளுடன் சென்ற கார்த்திக், மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்திற்கு மாலை போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கொலை தொடர்பாக கார்த்திக், சித்தார்த்தனன், சந்திரன் உள்ளிட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் ரவுடி கௌரிசங்கரின் கூட்டாளி பிரவீன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.