பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை தாக்க முயற்சித்தவர் கைது

பாட்னா:
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர்.
ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக நிதிஷ்குமார் மேடையேறிச் சென்றார்.  மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறிச் சென்று மேடையில் ஏறியுள்ளார்.
அவர் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் தோளில் குத்து விட்டுள்ளார்.  இதைக் கண்ட பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு தள்ளிச் சென்று, கைது செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் சங்கர் வர்மா என்பதும், நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.