மத்தியபிரதேசத்தில் 5.21 லட்சம் பேருக்கு வீடுகள் கிடைக்கிறது- பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு

போபால்:

பிரதமரின் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம புறம்) மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற 29-ந் தேதி 5.21 லட்சம் பயனாளிகள் பயன் அடைகிறார்கள்.

வீடுகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.