ரஷ்யா கைப்பற்றிய டிரோஸ்டியானெட்ஸ் நகரை மீட்டதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருந்த டிரோஸ்டியானெட்ஸ் நகரை மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை மீட்க உக்ரைன் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள டிரோஸ்டியானெட்ஸ் நகரை மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அண்மையில், கீவின் கிழக்குப்பகுதியில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, உக்ரைனில் உள்ள எண்ணெய் மற்றும் உணவு விநியோக அமைப்புகளை ரஷ்யா அழிக்கத்தொடங்கியிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிசென்கோ குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா கூடுதல் படைகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.