வாங்கிய பொருள்களுக்கு பணம் கேட்ட கடைக்காரரை சரமாரியாக தாக்கிய ரவுடிகளுக்கு வலைவீச்சு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, வங்கிய பொருள்களுக்கு பணம் கேட்ட கடைக்காரரை 2 ரவுடிகள் சரமாரியாக தாக்கிய காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மாதையன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். முன்னாள் ராணுவ வீரரான இவர், பணி ஓய்வுக்கு பின் மேட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு வந்த 2 ரவுடிகள் திண்பண்டங்களை வாங்கித் தின்றுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு செல்வன் கூறியதால், ரவுடிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்கி கீழே தள்ளி, கடையிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.