வெறித்தனம், வெறித்தனம்: மிரள வைக்கும் கே.ஜி.எஃப்.2 ட்ரெய்லர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில்
யஷ்
நடித்த கே.ஜி.எஃப். படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. யார் இந்த யஷ் என்று சினிமா ரசிகர்கள் வியந்து கொண்டாடினார்கள்.

இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். கே.ஜி.எஃப். 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

கே.ஜி.எஃப். 2 படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

கே.ஜி.எஃப்.2 ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூரில் பிரமாண்டமாக நடந்தது. பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கே.ஜி.எஃப். 2 படத்தின் கன்னட ட்ரெய்லரை சிவராஜ்குமாரும், தமிழ் ட்ரெய்லரை சூர்யாவும், மலையாளத்தில் ப்ரித்விராஜும், தெலுங்கில் ராம் சரணும், இந்தியில் ஃபர்ஹான் அக்தரும் வெளியிட்டுள்ளனர்.

ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தீயாக இருக்கிறது. வசூலில் புது சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வாவ், என்ன ஒரு ட்ரெய்லர். வெறித்தனம் என தெரிவித்துள்ளனர்.

Dhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

அடுத்த செய்திDhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.