40 வருஷம் ஜெயலலிதாவுக்கு சமைச்சு கொடுத்த ராஜம்மாள் மறைவு… சசிகலா, இளவரசி நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட சமையல்காரராக 40 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவர் ராஜம்மாள். போயஸ் கார்டனில் பல நாள்கள் தங்கியிருந்தும், ஜெயலலிதாவுக்கு பிடித்தமான உணவுகளை ராஜம்மாள் சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, இளவரசி ஆகியோரும் ராஜம்மாளுக்கு நெருக்கம் ஆனார்கள்.

இந்நிலையில், வயது மூப்பின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ராஜம்மாள் நேற்று மாலை 3 மணியளவில் காலமானார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

இந்த தகவலை அறிந்ததும், சசிகலாவும், இளவரசியும் நேரில் சென்று ராஜம்மாள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது மறைவை தாங்கமுடியாமல், சசிகலா மிகுந்த துயரத்தில் கண்ணீர்விட்டப்படி நின்றுக்கொண்டிருந்தார்.

பின்னர், உடலை இறுதிச்சடங்கிற்காக வாகனத்தில் ஏற்ற எடுத்துச்சென்ற போதும், வெளியே வேன் வரை சசிகலா பின்தொடர்ந்து வந்து பிரியாவிடை அளித்தார்.

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் இரண்டாம் மகன் ஜெய பிரதீப் ராஜம்மாள் உடலுக்கு தனியாக வந்து மரியாதை செலுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.