Dhanush:தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க களத்தில் இறங்கிய 'வி.ஐ.பி.'

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

இந்நிலையில் எங்க அப்பா, அம்மாவை நான் சேர்த்து வைக்கிறேன் என்று களத்தில் குதித்துள்ளாராம் மூத்த மகன் யாத்ரா. அவருக்கு 15 வயது தான் என்றாலும், ரொம்ப தெளிவாக, மெச்சூராக பேசுவாராம்.

நேரம் கிடைக்கும்போது எல்லாம் அப்பா
தனுஷ்
பற்றியே அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் யாத்ரா. ஆனால் தனுஷ் பற்றி யாத்ரா பேச்சு எடுக்கும்போது எல்லாம் அவரின் கவனத்தை திசை திருப்பிவிடுகிறாராம் ஐஸ்வர்யா.

தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லையாம். இருப்பினும் யாத்ரா அவரை சும்மாவிடுவதாக இல்லையாம். யாத்ராவின் இந்த முயற்சி தாத்தா ரஜினியை கவர்ந்திருக்கிறதாம்.

இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உங்களின் சந்தோஷம் தான் முக்கியம் என இப்படி பிரியலாமா என்று தான் ரஜினி தன் மகளிடம் கூறி வந்தார். இந்நிலையில் மகனே களத்தில் இறங்கியிருக்கிறார்.

தனுஷ் மாதிரியே அதிரடி முடிவு எடுத்த பாலாவின் மாஜி மனைவி

அடுத்த செய்திதென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மூளையே இல்ல: இந்தி நடிகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.