லூலூ நிறுவனத்துடன் 3500 கோடி ருபாய் ஒப்பந்தம் போட்ட தமிழக அரசு.!

அபுதாபியை சேர்ந்த லூலூ நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் துபாய் பயணத்தை அடுத்து, துபாய் நாட்டின் லூலூ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

லூலூ நிறுவனம் கேரளா, பெங்களூரில் உள்ள இடங்களில் மட்டுமே தனது தொழில்களை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்து, அதற்கான ஒப்பந்தம்  தற்போது கையெழுத்தாகியுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்த நிறுவனம் சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.