இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின்பறிப்பு.. இளைஞர்கள் இருவர் கைது

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 இளைஞர்கள் தங்கசங்கிலி பறித்து தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருகூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ராஜாத்தி என்பவரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள் தங்கசங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், மசக்காளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இருவரும் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க சங்கிலியையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.