சிவகார்த்திகேயன் போட்ட வழக்கு..!விரைவில் தீர்ப்பு..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக வலம் வருபவர்
சிவகார்த்திகேயன்
. இடையில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும் டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியால் அவரது மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன் காரணமாக தற்போது தன் சம்பளத்திலும் சற்று உயர்வை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும்
SK20
படத்திற்காக அவருக்கு அதிக தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்
ஞானவேல் ராஜா
மீது சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்ப தளபதிக்கே இந்த நிலைமையா ? ரசிகர்கள் கருத்து..!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்திகேயன் நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில்
நயன்தாரா
நாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் படுதோல்வியடைந்தது.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் சற்று ஆட்டம் கண்டது. இந்நிலையில் இப்படத்திற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி பாக்கி தொகையை ஞானவேல் ராஜா வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனால் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனுக்கு 11 கோடி கொடுத்துவிட்டு பாக்கி தொகையை தராததால் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பாக்கி தொகையை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் பத்து தல, விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் படம், ஜி .வி.பிரகாஷின் ரெபல் ஆகிய படங்களில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திகிசு கிசுவில் சிக்குவதெல்லாம் அல்வா சப்ட்ற மாதிரி…! எஞ்சாய் பண்ணும் வானி போஜன்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.