திண்டிவனத்தில் பத்திரப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது.!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பத்திரப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தான செட்டில்மெண்ட் பத்திரம் ஒன்றை பதிவு செய்வதற்காக திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

பத்திரத்தை பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சார் பதிவாளர் சங்கரலிங்கம் தனது உதவியாளர் மூலம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்த பிரகாஷ், அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள், சங்கரலிங்கத்தையும் அவருடைய உதவியாளர் சரவணனையும் கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.