அமெரிக்க பார்லிமென்டில் தேசிய சீக்கிய தின மசோதா| Dinamalar

வாஷிங்டன்-ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், இந்திய வம்சாவளிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக, சீக்கிய மக்கள், கடந்த 100 வருடங்களாக அதிக எண்ணிக்கையில் இங்கு குடிபெயர்கின்றனர். இவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.இந்நிலையில், சீக்கிய சமூகத்தினரை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை, இந்திய வம்சாவளி எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் சேர்ந்து தாக்கல் செய்துள்ளனர். இதற்கு, சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.ஆண்டுதோறும், ஏப்ரல் 14ம் தேதி, சீக்கிய புத்தாண்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.