நயன்தாராவால் புள்ள பெத்துக்க முடியாது: பயில்வான் ரங்கநாதன்

நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர்
விக்னேஷ் சிவன்
மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக
நயன்தாரா
தெரிவித்தார்.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து நயன்தாராவுக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டதற்கு, தற்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் திருமணம் பற்றி யோசிக்கக் கூட அவருக்கு நேரம் இல்லை என்றார்.

இதற்கிடையே பாலிவுட் நடிகைகளை போன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நயன்தாரா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான
பயில்வான் ரங்கநாதன்
கூறியிருப்பதாவது,

நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது. அதனால் அவரால் இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. நயன்தாராவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. எனவே, அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்.

அதனால் தான் வாடகை தாய் முறையை தேர்வு செய்திருக்கிறார் என்றார்.

நயன்தாரா என்னமோ செய்யட்டும், உங்களுக்கு என்ன வந்தது. எங்கள் தலைவியை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று நயன்தாராவின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை விமர்சித்துள்ளனர்.

என்னது, ஷங்கரின் இளைய மகளுக்கு அவசர திருமணமா?

அடுத்த செய்திஆறப்போட்டு அடிக்க காத்திருக்கும் விஜய்? தாமதத்திற்கான காரணம் இதானாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.