நானும் வருவேன்: தனுஷை முன்னாடி விட்டு பின்னாடியே கிளம்பிய ஐஸ்வர்யா

தனுஷை பிரிந்த பிறகு தன் கெரியரில் படுபிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு ஓ சாத்தி சல் என்கிற இந்தி படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தான்
ஐஸ்வர்யா
இயக்கும் முதல் பாலிவுட் படமாகும். முதல் பட வேலையை துவங்கும் முன்பே ஐஸ்வர்யாவை தேடி இரண்டாவது இந்தி பட வாய்ப்பு வந்துவிட்டது. முசாபிர் வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோராவுக்காக தான் அந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இதற்கிடையே ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்
தனுஷ்
. மேலும் ஒரு பெரிய நிறுவனத்தின் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அது மெகா பட்ஜெட் இந்தி படமாகும்.

தனுஷ் இரண்டு இந்தி படங்களில் நடிக்கவிருக்கும் நேரத்தில், ஐஸ்வர்யாவோ இரண்டு இந்தி படங்களை இயக்கவிருக்கிறார்.

இதை பார்த்த சினிமா ரசிகர்களோ, தனுஷ் எங்கு சென்றாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பின்னாலேயே செல்கிறாரே என்கிறார்கள்.

பாலிவுட் செல்லும் ஐஸ்வர்யா சந்தோஷத்தில் இருக்கிறார். தன் வேலை குறித்து அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார்.

தனுஷ் பல காலமா ஆசைப்பட்டது சிவகார்த்திகேயனுக்கு ஈஸியா கிடைச்சுடுச்சு

அடுத்த செய்திஒரே தப்பை மீண்டும் மீண்டும் செய்யும் தனுஷ்: கவலையில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.