”14 கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேரம் ஒதுக்கி சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் சார்பில் 14 கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் கொடுக்கப்பட்டது

கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்த பிரதமர் ஆவண செய்வதாக கூறினார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவிட அனுமதிக்க கோரிக்கை

கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும்

மேகதாதூவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கக் கூடாது

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் டி.ஆர்.டி.ஓ. ஆய்வுக் கூடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை

தமிழகத்தில் அமைய உள்ள விமான நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்புத்துறை நிலங்களை ஒதுக்கித்தர வேண்டும்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது

டெல்லியில் மாடல் பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பார்வையிட ஏற்பாடு

டெல்லி முதலமைச்சருடன் இணைந்து பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் தி.மு.க. அலுவலக திறப்பு விழா

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.