அரசு விரைவுப் பேருந்துகள்.. பெண்களுக்கென சூப்பரான அறிவிப்பை வெளியிட தமிழக அரசு.!!

தமிழக அரசு பெண்களுக்கென சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, அது என்னவென்று பார்த்தால், அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் வெளியூருக்குச் செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில், பெண்களுக்கென பிரத்யேக தலா 2 படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லாத அரசு பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுகைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பேருந்துகளின் முன்பதிவு செய்யாத போதே 1LB மற்றும் 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

பேருந்துகள் புறப்படும் வரை குறிப்பிட்ட படுக்கைகளுக்கு பெண்கள் பயணிகள் யாரும் முன் பதிவு செய்யாவிடில் அதனை பொதுப்படையாக கருதி மற்ற பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.