இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து.. பரிதாபமாய் பலியான மாணவன்..!

இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசிம். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங்  படித்து வந்தார். சம்பவதன்று, வகுப்பு முடிந்து நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் முகமது யாசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரின் நண்பர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.