தொடர்ந்து உயரும் நூல் விலை – அதிர்ச்சியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள்

இந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் திருப்பூரில் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்து நூல் ஆகும். இந்நிலையில், தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பாளர்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
image
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது. கடந்த மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன.
image
இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் திருப்பூர் தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.363-க்கும், 24-ம் நம்பர் ரூ.375-க்கும், 30-ம் நம்பர் ரூ.385-க்கும், 34-ம் நம்பர் ரூ.405-க்கும், 40-ம் நம்பர் ரூ.425-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.355-க்கும், 24-ம் நம்பர் 365-க்கும், 30-ம் நம்பர் ரூ.375-க்கும், 34-ம் நம்பர் 395-க்கும், 40-ம் நம்பர் ரூ.415-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.