புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளில் தீ விபத்து.. குடும்பத்தினர் மீட்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் உனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் சுமார் 150 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

Bathu பகுதியில் உள்ள குடிசைகளில் தீ பற்றியதாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற மீட்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொழிலாளர்களும் அவர்களது குழந்தைகளும் உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.