மதுராந்தகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களை கைது செய்த போலீசார் ஒருவருக்கு மாவு கட்டு போட்டு விட்டுள்ளனர்.

கீழவளம் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையில் கடந்த 19-ஆம் தேதி இரவு ஊழியர்களை மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இந்நிலையில், கத்தி காட்டி மிரட்டி அந்த காவலர்களை தாக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு கார், 8 இருசக்கர வாகனம், 17 செல்போன்கள், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான விக்னேஷ், கழிவறையில் வழிக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.