மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம்!



சுகாதார அமைச்சுக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவச்சிகள் மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார ஊழியர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.