“20 கிலோ ஆர்.டி.எக்ஸ்… 20 நகரங்கள் டார்கெட்; மோடியைக் கொல்வேன்" – பரபரப்பை ஏற்படுத்திய மின்னஞ்சல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த பதற்றத்துக்குரிய மின்னஞ்சலில், “என்னிடம் 20 கிலோவுக்கும் அதிகமான ஆர்.டி.எக்ஸ் உள்ளது. 20 பெரிய நகரங்களில் ஒரே மாதிரியான குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த தயார் நிலையில் இருக்கிறேன். மோடியை என்னால் முடிந்தவரை விரைவாகக் குண்டுவீசிக் கொல்வேன். அவர் என் வாழ்க்கையை அழித்துவிட்டார்.

மின்னஞ்சல்

நான் யாரையும் விட்டுவிடமாட்டேன். மக்கள் ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்வேன். அவர்கள் எனது குண்டுகளால் இறந்துவிடுவார்கள். நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய வெடிகுண்டுகள் என்னிடம் இருப்பது மகிழ்ச்சி.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டு அது செயல்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் இணைந்துள்ளன. இந்த திட்டத்தை அமல்படுத்த என் உயிரையும் கொடுப்பேன்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி

இந்த மின்னஞ்சலைப் பெற்றுள்ள மும்பை கிளை என்.ஐ.ஏ, அதைப் பல்வேறு ஏஜென்சிகளிடம் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், இணையப் பாதுகாப்பு நிறுவனம் தற்போது மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐ.பி முகவரியைக் கண்டறிய முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.