டாப் கியரில் செல்லும் சமந்தா..! வெளியான அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. நாயகியாக மட்டுமல்லாமல் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திவரும்
சமந்தா
தற்போது
யசோதா
என்ற படத்தில் நடித்து வருகின்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த சமந்தா
பேமிலி மேன்
வெப் தொடரில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அந்த ஒரு காட்சியால் தடைசெய்யப்படும் பீஸ்ட்..ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ணா பிரசாத் யசோதா படத்தை தயாரிக்கிறார். ஹரி மற்றும் ஹரிஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணா பிரசாத் கூறியதாவது, ” நடிகை சமந்தா யசோதா படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைகாட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

யசோதா

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் முடிவடையும். மேலும் இந்த ஆக்க்ஷன் திரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான சினிமா ரசிகர்களை திரையரங்கிற்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது.

சமந்தா

சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழு கொடைக்கானலுக்கு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு சென்றுள்ளது. இப்படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், திவ்யா ஸ்ரீபாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் – நடிகர் விஷால் பேச்சு!

அடுத்த செய்திசிவகார்த்திகேயன் மீது கொல வெறியில் சிம்பு: இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.