தென் கொரியா, வட கொரியா மாறி மாறி வார்னிங்… உலகப் போருக்கு கொண்டு போய் விடாம இருந்தா சரி!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையிலும், ஏவுகணை சோதனைகளை நடத்துவதை மட்டும்
வட கொரியா
நிறுத்துவதாக இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி, பிற நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது வடகொரியா.

இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள ஏவுகணை மையத்திற்கு அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் நேற்று சென்றிருந்தார். அப்போது, ‘தென்கொரியா மீது வட கொரியா தாக்குதலுக்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால் அந் நாட்டின் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்படும்’ என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் இந்த மிரட்டல் குறித்து, வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோஜாங் கூறும்போது, ” வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று
தென் கொரியா
பாதுகாப்பு துறை அமைச்சர் பேசியது மிகபெரிய தவறு.

இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

எங்கள் மீது ராணுவ பலத்தை தென்கொரியா பயன்படுத்தினால், பதிலுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டி வரும். அதன் விளைவாக எதிரிகள் பேரழிவை சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு பெரும் துயரமாக அமைந்துவிடும். எங்கள் படை பலத்திற்கு முன்பு தென்கொரியா ஒரு பொருட்டே இல்லை” என்று கிம் யோஜாங் பதிலடி கொடுத்துள்ளார்.

வட கொரியாவும், தென் கொரியாவும் இப்படி தொடர்ந்து மாறி மாறி வார்னிங் தந்து கொண்டிருப்பது எங்கே மூன்றாம் உலகப் போரில் கொண்டு போய் விட்டுவிடுமோ என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

அடுத்த செய்திமறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.