தனுஷை பழிவாங்க துடிக்கும் அவர்..! இது எங்கபோய் முடியப்போகுதோ?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்துக்கொண்டிருக்கும்
தனுஷ்
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். இருப்பினும் அவரின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது அவரையும் அவரது ரசிகர்களையும் சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், பாலிவுட் படமான அத்ராங்கி ரே மற்றும்
கார்த்திக் நரேன்
இயக்கத்தில் வெளியான
மாறன்
ஆகிய படங்கள் ott யில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி சொதப்பின.

அந்த ஒரு காட்சியால் தடைசெய்யப்படும் பீஸ்ட்..ரசிகர்கள் அதிர்ச்சி..!

எனவே தனுஷ் தற்போது நடித்துவரும்
வாத்தி
,
நானே வருவேன்
,
திருச்சிற்றம்பலம்
ஆகிய படங்களை மலைபோல் நம்பியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான மாறன் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

தனுஷ்

அசுரன், வடசென்னை போன்ற தரமான படங்களில் நடித்த தனுஷ் இதுபோன்ற ஸ்வாரஸ்யமில்லாத கதையில் ஏன் நடித்தார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டுவந்தனர். அதுமட்டுமில்லாமல் படம் வெளியான அடுத்த நாளே கார்த்திக் நரேன் ஒரு சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டார்.

அதில் விரைவில் உண்மையை சொல்லப்போகிறேன் என பதிவிட்டிருந்தார்.இதனைப்பார்த்த ரசிகர்கள் படக்குழுவிற்கும் கார்த்திக் நரேனுக்கும் எதோ பிரச்சனை இருப்பதாக பேசிவந்தனர். அதுபோல இப்படம் ஆரம்பமான சில மாதங்களிலேயே தனுஷிற்கும் கார்த்திக் நரேனுக்கும் எதோ மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

மாறன்

இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் நிறங்கள் மூன்று படத்தில் சில விஷயங்களை சேர்த்துள்ளாராம். அதாவது மாறன் படத்தில் தனக்கும் நடிகர் தனுஷிற்கும் ஏற்பட்ட மோதல்களைப்பற்றி நிறங்கள் மூன்று படத்தில் கார்த்திக் நரேன் சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வெளிப்படையாக கூறாமல் படத்தின் மூலம் தன் பிரச்சனைகளை கார்த்திக் நரேன் கூறுவதாக வந்த தகவலினால் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திகேமரா முன்பு அதை கழட்டி காட்டி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பூனம் பாண்டே…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.