அல்லு அர்ஜுனுக்கு டிராபிக் போலீஸ் அபராதம்

ஐதராபாத்: போக்குவரத்து விதிகளை மீறியதாக அல்லு அர்ஜுனுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்தனர். ஐதராபாத்திலுள்ள மார்க்கெட் பகுதி ஒன்றுக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காரில் வந்திருந்தார். அப்போது அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. பாதுகாப்புக்கு வந்தவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி அல்லு அர்ஜுனை காரில் அமர வைத்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த டிராபிக் போலீசார், அல்லு அர்ஜுனின் கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் (சன் கன்ட்ரோல் பிலிம்) ஒட்டப்பட்டு இருப்பதற்காக ரூ.700 அபராதமாக விதித்தனர். இதையடுத்து அந்த தொகையை அல்லு அர்ஜுன் செலுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.