ஓடும் பேருந்து முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பலி

ஈரோட்டில், ஓடும் பேருந்து முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோட்டில் இருந்து காஞ்சி கோவில் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மாவட்ட தலைமை மருத்துவமனையை கடந்த போது சாலையோரம் நின்ற நபர் திடீரென பேருந்து முன் பாய்ந்தார்.

வயிற்றில் பேருந்து சக்கரம் ஏறிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், ரங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் எனத் தெரிவித்த போலீசார் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.