ரூ.1856 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள்.. 56 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1856 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 56 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

சென்னையில் 334 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 உயமட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்பட 24 புதிய பேருந்து நிலையங்கள் 302 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் கே.என்.நேரு குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.