அமெரிக்காவில் கிரீன் கார்டு கட்டுப்பாடு தளர்வு: இந்தியர்கள் வரவேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதா சட்டமானால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பயனடைவர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் பலர், பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டுமென்றால் கிரீன் கார்டு பெற வேண்டும். அதனால் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர்.

latest tamil news

இந்நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்கள் எண்ணிக்கையை 7ல் இருந்து 15 ஆக அதிகரிக்கவும் அக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு அதிபரின் ஒப்புதலை பெற்றபின் சட்டமாக மாறும். இம்மசோதா சட்டமாக மாறினால், அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்கள் பயனடைவர் என்பதால் இதை வரவேற்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.