என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்: அதிரடி காட்டும் ஐஸ்வர்யா..!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அண்மையில் பயணி ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

சந்தோஷத்திற்காக தனுஷ் செய்ய போகும் புது காரியம்: எப்படியோ நல்லது நடந்த சரி..!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு தனது வொர்க் அவுட் சம்பந்தமான பதிவை பகிர்ந்துள்ளார்.

சமீபகாலமாக ஐஸ்வர்யா எந்த பதிவுகள் பகிர்ந்தாலும் அதனை விளாசித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா. அவரின் இந்த போல்ட்டான பதிவிற்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அவரின் தற்போதைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தளபதி”கள் சந்திப்பு; வைரலாகும் நிகழ்வு !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.