ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் – பிரதமர் பெருமிதம்

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மூன்று கோடி வீடுகள் கட்டி முடித்துள்ளதாகவும், இவை மகளிர் அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஊரக வீட்டு வசதித் திட்டத்தில் இரண்டு கோடியே 52 இலட்சம் வீடுகள் கட்டி முடித்துள்ளதாகவும், இதற்காக ஒரு இலட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் 58 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒரு இலட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு, மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.