கட்டட தொழிலாளருக்கு இலவச சிகிச்சை முகாம்| Dinamalar

தங்கவயல்,–இந்திரா காந்தி கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.தொழிலாளர் சங்க தலைவர் சம்பத்குமார் பிறந்த தினத்தை முன்னிட்டு, 500 பேருக்கு, கோரமண்டல் ரயில் நிலையம் அருகில் உள்ள கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை டாக்டர் அறிவழகன் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ”ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், இதய அறுவை சிகிச்சை உட்பட முக்கிய மருத்துவ வசதிகள் தங்கவயலில் இல்லை. கொரோனா நேரத்தில் முடிந்தவரை மருத்துவ உதவிகளை பா.ஜ., அரசு செய்தது. தங்கவயலில் மருத்துவ வசதி இன்னும் மேம்பட வேண்டும்,” என்றார்.தொழிற்சங்கத் தலைவர் சம்பத் குமார், அ.தி.மு.க., பிரமுகர் அன்பு, காங்கிரஸ் பிரமுகர்கள் கார்த்திக், நகராட்சி உறுப்பினர் ஜெயபால், அனந்த கிருஷ்ணன், சண்முகம், சுபபிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.கட்டட தொழிலாளர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.