கனடாவில் ஜோம்பி நோய்- மூளை செயலிழந்து கொத்து கொத்தாக மடியும் மான்கள்

கனடாவில் மான்களை தாக்கக்கூடிய விசித்திரமான மற்றும் தொற்று நோயான ஜோம்பி நோய் பரவி வருகிறது. கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்வெசன் ஆகிய மாகாணங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின்படி, இந்நோய் மான், மான் வகைகளான எல்க், கலைமான், சிகா மான் மற்றும் மூஸ் ஆகியவற்றை அதிகளவில் தாக்குகிறது. விலங்குகளுக்கு ஆபத்தான இந்த நோய்க்கு சிகிச்சையோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தொற்று முதன்முதலில் அமெரிக்காவில் 1960களில் கண்டறியபட்டதாகவும்,  இந்நோய் கொலராடோ, ஓக்லஹோமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மினசோட்டா, விஸ்கான்சின், தெற்கு டகோட்டா மற்றும் மொன்டானா ஆகிய இடங்களில் பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோம்பி நோயால் பாதிக்கப்பட்ட மானை சாப்பிடுவதன் மூலம் மக்களுக்கு பரவும் எனவும், இதை வேட்டையாடுபவர்களை நோய் பாதிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், மனிதர்களில் ஜோம்பி நோய் ஏற்படுவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகின்றனர்.
ஜோம்ப நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு அதன் மூளையின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. அதிகப்படியான உமிழ்நீர், ஒருங்கிணைப்பு இல்லாமை, அசாதாரண நடத்தை, அதிகப்படியான சிறுநீர் கழித்தல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
இந்த வெளிப்புற அறிகுறிகள் மக்கள் மத்தியில் ஜோம்பி நோய் என்று குறிப்பிட வழிவகுத்துள்ளது.  ஆனால் அறிகுறிகள் 15 மாதங்கள் முதல் 13 வயது வரை உள்ள மான்களில் காணப்படுகின்றன. மேலும், சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் தொற்றுநோயை பரப்பலாம் எனவும் கூறப்படுகிறது.

ஜோம்பி நோய் குறித்து சுகாதார நிறுவனம் கூறியதாவது:-

மக்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மான்களை சுடாமல் இருப்பது, உண்ணுவது அல்லது நோயுற்றிருக்கும் மானின் இறைச்சியைக் கையாளுவது, விலங்குகளுக்கு ஆடை அணியும்போது ரப்பர் கையுறைகள் அணிவது போன்றவை பின்பற்றுவது மூலம் தொற்று பரவும் அபாயம் குறைக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்..
உக்ரைனுடனான போரில் நிறைய வீரர்களை இழந்து விட்டோம்- ரஷியா முதன்முறையாக ஒப்புதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.