கர்மா விடுமா?: நயன்தாராவை கொந்தளிக்க வைத்த நடிகர்

தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜின் புது படத்தில் நடிக்கிறார்
நயன்தாரா
. அந்த படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரம் உள்ளது.

விஜய் டிவி பிரபலம் ஒருவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் யுவராஜ். ஆனால் அந்த டிவி பிரபலத்துடன் எல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. மேலும் மலையாள நடிகரான ரோஷன் மேத்யூவை நடிக்க வைக்குமாறு நயன்தாரா கூறினாராம்.

நயன்தாரா சொன்னதை கேட்டு ரோஷனிடம் பேசினாராம் யுவராஜ். ஆனால் அவரோ, நயன்தாரா படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ரோஷன் மேத்யூ
செய்த காரியத்தால் நயன்தாரா அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாராம். பொடிப் பய, என் காதலராக நடிக்க மறுத்துட்டாரே என்று குமுறினாராம் நயன்தாரா.

எத்தனையோ நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் அவரையும் ஒரு நடிகர் அதிர வைத்திருக்கிறார்.

அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் விக்ரமின்
கோப்ரா
படம் மூலம் கோலிவுட் வந்திருப்பவர் தான் இந்த ரோஷன் மேத்யூ என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஷன் செய்த காரியம் குறித்து அறிந்தவர்கள், கர்மா சும்மாவிடாது நயன்தாரா என்கிறார்கள்.

பீஸ்ட் படக் கதை சுட்டதா, விஜய் என்ன சொன்னார்?: நெல்சன் திலீப்குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.