சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க 'நோ' சொன்ன தமிழக அரசு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமின் கோரி, சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
image
இவ்வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் சூழலில், தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகவும், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை கலைப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிவசங்கர் பாபாவினால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.