சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகும் 'ரத்தம்'

தமிழ்ப்படம் தமிழ்ப்படம் 2 திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளை கேலி செய்து அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம்’ பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, அவர் இயக்கிய ‘ரெண்டாவது படம்’ என்ற திரைப்படம் பல்வேறு பிரச்னைகளால் வெளியாகவே இல்லை. பின்னர் தமிழ்ப்படம் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை நாயகனாக்கி ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தி இயக்கி முடித்துள்ளார்.

image

படப்பிடிப்புப் பணிகள் நிறைவுற்றததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளை துரிதப்படுத்த சி.எஸ்.அமுதன் திட்டமிட்டுள்ளார். ‘ரத்தம்’ திரைப்படம், அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபடும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இத்திரைப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ‘தெருக்குரல்’ அறிவு ஒரு தீம் பாடலை எழுதியதோடு பாடியும் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.